40 இடங்களையும் கைப்பற்றுவோம்: கருணாநிதி- ராமதாஸ் நம்பிக்கை
சென்னை:
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெல்லும் என அக் கட்சியின்தலைவர் கருணாநிதியும், பா.ம.க. நிறுவனர் ராமதாசும் கூறினர்.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய பின் கருணாநிதியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார் ராமதாஸ்.
இதையடுத்து இருவரும் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கருணாநிதி: பா.ம.கவின் முடிவு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. டாக்டர் ராமதாசுக்கு என் வாழ்த்துக்கள்.
ராமதாஸ்: தமிழக வரலாற்றில் ஒரு ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க் கட்சிகள் இடையே இந்த அளவுக்கு ஒற்றுமைஏற்பட்டதில்லை. பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் இந்தக் கூட்டணிவெல்லும்.
1980ம் ஆண்டு தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நின்ற எம்.ஜி.ஆர். 2 தொகுதிகளில் மட்டுமேவென்றார். இப்போது அதிமுகவுக்கு அந்த இரண்டு இடங்கள் கூட கிடைக்கப் போவதில்லை.
கருணாநிதி: அதிமுக அரசுக்கு எதிராக பெரும் அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் 40 தொகுதிகளையும்கைப்பற்றிக் காட்டுவோம்.