கண்டலேறு அணை திறப்பு: 12 நாட்களில் சென்னைக்கு தண்ணீர் வரும்!
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து மாலை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் 12நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை நகரில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. கோடை காலத்தில் இது உக்கிரமடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இந் நிலையில் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் சித்தூர், நெல்லூர்மாவட்ட பாசனத்திற்கு 1 டிஎம்சி நீரும், திருப்பதிக்கு 0.7 டிஎம்சி நீரும், சென்னைக்கு 1 டிஎம்சி நீரும்விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கான தண்ணீர் 12 நாட்களுக்குப் பிறகே வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications