ராஜீவ் கொலையில் திமுகவுக்கு தொடர்பில்லை: காங்கிரஸ்
டெல்லி&விழுப்புரம்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுகவுக்கோ, திமுக தலைவர்களுக்கோ தொடர்பில்லை என்று காங்கிரஸ்தலைவர்களுள் ஒருவரான பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுக மீது குற்றம் சுமத்திய காங்கிரஸ் இப்போது எப்படி திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம்என்று பிரதமர் வாஜ்பாய் எழுப்பியுள்ள கேள்விக்கு, நிருபர்களிடம் பதிலளித்த பிரணாப் முகர்ஜி,
1999ம் ஆண்டு வெளியான ஜெயின் கமிஷன் அறிக்கையில் ராஜீவ் காந்தி கொலைக்கும், திமுகவுக்கும் தொடர்பில்லை என்றுதெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதை காங்கிரஸ் முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.
நாட்டில் மதச்சார்பின்மை நிலவ வேண்டும் என்பதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகள், மதவாத சக்திகளுக்கு எதிராக கூட்டணிஅமைத்துள்ளன என்றார்.
திமுகவை குற்றம் சாட்டவில்லை: பா.ஜ.க. பல்டி
ஜெயின் கமிஷன் அறிக்கையைக் காட்டி திமுக மீது பா.ஜ.க. குற்றம் சாட்டவில்லை என்று தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர்ராஜா கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் நிருபர்களிடம் பேசிய அவர் பேசியதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுக மீது காங்கிரஸ் குற்றம் சுமத்தியது. அதைக் காரணம் காட்டி மத்தியில் ஒரு அரசேகலைவதற்கு காங்கிரஸ் காரணமாக இருந்தது. இப்போது அதே திமுகவுடன் கூட்டணி அமைப்பது சந்தர்ப்பவாதம். இப்பிரச்சனையில் பா.ஜ.க. குற்றம் சாட்டுவது காங்கிரசைத்தான், திமுகவை அல்ல.
திமுக மீது காங்கிரஸ் காங்கிரஸ் கூறியது உணர்ச்சிப் பூர்வக் குற்றச்சாட்டு. ஆனால் அதிமுகவுடன் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டதுஅரசியல் வேறுபாடு. எனவே, வாஜ்பாய் அரசை அதிமுகவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்க முயல்வதை இதனுடன் ஒப்பிடமுடியாது.
356வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி அதிமுக அரசைக் கலைக்க ஒருமுறைகூட கோரியதில்லை என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார். ஆனால், அவர் கைது செய்யப்பட்டபோது திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் கூடியதிமுகவினர் அதிமுக அரசைக் கலைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினர் என்றார்.












Click it and Unblock the Notifications