வைத்தீஸ்வரன் கோவில் யானைக்கு மீண்டும் மதம் பிடித்தது
சீர்காழி:
புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் யானை தையல்நாயகிக்கு மீண்டும் மதம் பிடித்து, கோவிலுக்குள்அங்குமிங்கும் ஓடி பக்தர்களை பீதிக்குள்ளாக்கியது.
வைத்தீஸ்வரன் கோவில் யானையான தையல்நாயகிக்கு சில மாதங்களுக்கு முன்பு மதம் பிடித்தது. இதையடுத்துகட்டியிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு கோவில் குளப் பகுதியில் அங்குமிங்கும் ஓடியது. மயக்க ஊசிபோட்டு யானையைப் பிடித்து மீண்டும் கட்டிப் போட்டனர்.
இந் நிலையில் மீண்டும் தையல்நாயகிக்கு மதம் பிடித்தது. சங்கிலியை அறுத்துக் கொண்ட யானை, சண்முகர்சன்னதியின் முன்பு இருந்த உண்டியலை உடைத்தது. பின்னர் அங்குமிங்கும் நடக்கத் தொடங்கியது.
யானையை அடக்க கோவில் ஊழியர்கள் முயன்று பார்த்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்துசத்தியமங்கலத்திலிருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
கோவிலில் இருந்த இன்னொரு யானையான பெரியநாயகியை வைத்து தையல்நாயகியை சமாதானப்படுத்தமுயன்றனர். ஆனால் பெரியநாயகியை, தையல்நாயகி துதிக்கையால் தாக்கியதில் பெரியநாயகி காயமடைந்தது.
பின்னர் சத்தியமங்கலம் கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி போட்டு தையல்நாயகியை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஏற்கனவே சில முறை இந்த யானைக்கு மதம் பிடித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு முதுமலை யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோதும் அடம் பிடித்துலாரியில் ஏற மறுத்தது. அப்போது பெரியநாயகியை வைத்துத்தான் தையல் நாயகியை லாரியில் ஏற்ற முடிந்ததுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications