வரதட்சணை பிரச்சனை: தாயை கொன்றார் மகள்!!
Subscribe to Oneindia Tamil
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டி என்ற இடத்தில் கணவன் கேட்ட வரதட்சணைப் பணத்தைக் கொடுக்க மறுத்ததாயை கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்தார் மகள்.
பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்தாய். கல்யாணம் ஆன நாள் முதல் செல்லத்தாயியின் கணவர்வரதட்சணை கேட்டு அவரைக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு செல்லத்தாயியை அவரது வீட்டுக்கு அனுப்பி விட்டார் கணவர். தாய்வீட்டுக்கு வந்த செல்லத்தாய், வரதட்சணை பணமான ரூ. 10,000த்தை உடனடியாக கொடுக்குமாறு தாய்கருப்பாயியை வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கருப்பாயி மறுத்துள்ளார். இந் நிலையில் நேற்றிரவுகருப்பாயி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்தார்செல்லத்தாய்.












Click it and Unblock the Notifications