வைத்தீஸ்வரன் கோவில் யானைக்கு சிறப்பு சிகிச்சை: ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவில் யானையான தையல்நாயகிக்கு கோவையில்சிறப்பு சிகிச்சை கொடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

வைத்தீஸ்வரன் கோவில் யானையான தையல்நாயகிக்கு அடிக்கடி மதம் பிடித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்தமுடியாமல் கோவில் ஊழியர்கள் திணறி வருகிறார்கள். இதன் காரணமாக சமீபத்தில் முதுமலையில் நடந்தயானைகள் சிறப்பு முகாமிலும் தையல்நாயகி கலந்து கொள்ளவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியும், இம் மாதம் 12ம் தேதியும் தையல் நாயகிக்கு மதம் பிடித்தது. மறுபடியும்அதற்கு மதம் பிடிக்கலாம் என்று அஞ்சப்படுவதால், கோவை மாவட்டம் டாப் ஸ்லிப் பகுதியில் உள்ள யானைகள்முகாமில் வைத்து தையல்நாயகிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து தையல் நாயகி டாப் ஸ்லிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. சிறப்பு சிகிச்சையுடன்,சிறப்பு உணவும் அதற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+