ஹிட்லர் ராஜ்ஜியம்: 500 இளைஞர்களை விடிய விடிய சிறை வைத்த போலீஸ்!!
திருப்பூர்:
கோவை மாவட்டம் திருப்பூரைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்களை விடிய விடிய மைதானத்தில் சிறைவைத்து திருப்பூர் போலீஸார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
திருப்பூர் பாண்டியன் நகர், மாஸ்கோ நகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டஆண்களை, நேற்று நள்ளிரவில் வீடு புகுந்து போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அனைவரும் திருப்பூரில் உள்ள மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அவர்களிடம் கைரேகைகள்பெறப்பட்டன, புகைப்படம் எடுக்கப்பட்டது. இன்று காலைதான் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
வீட்டில் புகுந்து ஆண்களை போலீஸார் அழைத்துச் சென்றது அப்பகுதி பெண்களிடையே பெரும் பதற்றத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குற்றச் செயல்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த இளைஞர்கள் அழைத்துச்செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட ஹிட்லர் ராஜ்ஜியம் ஸ்டைலில் போலீசார் செயல்பட்டது அப் பகுதியில் பெரும் பதற்றத்தைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications