பா.ஜ.க.வின் பிரசாரம் எங்களுக்கே சாதகமாகும்: பர்தான்
சென்னை:
வாஜ்பாய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக நினைத்துக் கொண்டு பா.ஜ.க.வினர் மேற்கொண்டு வரும் பிரசாரங்கள்எங்களது கூட்டணிக்கே ஆதரவாக திரும்பும் என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தான்கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாஜ்பாய்க்கும், முகம் தெரியாதவர்களுக்கும் இடையேநடக்கும் போர், வாஜ்பாய்க்கு எதிராக போட்டியிட யாரும் இல்லை என்ற ரீதியில் பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்துவருகிறார்கள்.
வாஜ்பாயை பிரதம வேட்பாளராக பா.ஜ.க.வினர் கூறி வருவது எங்களுக்கு ஆதரவாக திரும்பும். தனிப்பட்டநபர்களைப் பார்த்து மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள். கட்சிகளுக்கும், அவர்களது கொள்கைகளுக்கும்தான்வாக்குகள் கிடைக்கும்.
எங்களது கூட்டணியின் சார்பில் யார் பிரதமராக வருவார்கள் என்பதை இப்போதே சொல்ல வேண்டிய அவசியம்இல்லை. பெரும்பான்மை எம்.பிக்களைக் கொண்ட கட்சிக்கே பிரதமர் வேட்பாளர் வாய்ப்பு கிடைக்கும் என்றார்அவர்.












Click it and Unblock the Notifications