27 நக்சலைட்டுகளின் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் வேட்டையின்போது கைது செய்யப்பட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 27நக்சலைட்டுகளின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆ ண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை, கலவாய் வனப் பகுதிகளில்போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையின்போது 6 பெண்கள் உள்ளிட்ட 27 நக்சலைட்டுகள் பிடிபட்டனர். ஒருவர்சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 27 பேரின் காவலும் நேற்றுடன்முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களதுகாவலை பிப்ரவரி மாதம் 11ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications