For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங். ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் சேர மாட்டோம்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால், அமைச்சரவையில் சேர மாட்டோம் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

நக்கீரன் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்குவெற்றி கிடைத்து ஆட்சி அமைத்தால், காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் திமுக இடம் பெறாது. அப்படிஒரு எண்ணம் இப்போது இல்லை.

இருப்பினும் இது எனது எண்ணம்தான். கட்சியின் செயற்குழு, பொதுக்குழு என்ன முடிவு எடுக்கிறதோஅதன்படிதான் திமுக நடக்கும். என்னைப் பொருத்தவரை மத்தியில் ஆட்சியில் பங்கேற்க வேண்டாம் என்றுகருதுகிறேன்.

காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தால் சோனியா காந்தியேபிரதமராக வேண்டும் என்று விரும்புகிறேன். அவருக்குத்தான் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்.

தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற விரும்புகிறேன். காரணம், அதிக எம்.பிக்கள் திமுகவுக்குஇருந்தால்தான் தமிழக நலன்களுக்காகப் போராட முடியும். திமுகவிடம் 24 எம்.பிக்கள் இருந்ததால்தான் சேலம்உருக்காலையை கொண்டு வர முடிந்தது. வங்கிகளை தேசியமயமாக்குவதற்கான நடவடிக்கையிலும் திமுகவினால்ஈடுபட முடிந்தது.

விருதுநகர் மாநாட்டுக்கு சோனியா காந்தியை கூப்பிடும் எண்ணம் இல்லை. இருப்பினும், நானும், சோனியாவும்சேர்ந்து கூட்டுப் பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

தலித் கட்சிளுக்கு சட்டசபைத் தேர்தலின்போது போதுமான இடங்கள் கொடுக்கப்படும். கடந்த தேர்தலில் தலித்கட்சிகளுக்கு நிறைய இடங்கள் கொடுக்கப்பட்டதை யாரும் மறக்கக் கூடாது என்று கூறியுள்ளார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X