நோக்கியா ஷோ-ரூமில் கொள்ளை: ரூ. 10 லட்சம் செல்போன்கள் திருட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நோக்கியா செல்போன்கள் விற்பனை நிலையத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருடப்பட்டுள்ளன.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நோகியா செல்போன் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு நேற்று இரவு கடையின் பின்பக்ககதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 80 செல்போன்கள், ரூ. ஒன்றறை லட்சம் ரொக்கம், 16 பவுன் தங்கநகைகள் ஆகியவற்றை திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.
கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் சண்முக ராஜேஸ்வரன்தெரிவித்துள்ளார். திருடு போன செல்போன் உள்ளிட்டவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும்.












Click it and Unblock the Notifications