திமுக-காங்கிரஸ் கூட்டணி கலாட்டா
சென்னை:
திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே தொகுதிகள் பங்கீடு தொடர்பாக நேற்றிரவு வரை உடன்பாடு ஏற்படவில்லை.இதையடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாவதும் ஒத்தி வைக்கப்பட்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.
காங்கிரசுக்கு 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் இது தொடர்பாக நடந்தபேச்சுவார்த்தைகளில் முட்டுக் கட்டை ஏற்பட்டுவிட்டது. மேலும் பாண்டிச்சேரியை பா.ம.கவுக்குத் தந்துவிட்ட திமுக, அதைமீண்டும் காங்கிரசுக்குத் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.
10 சீட்கள் இருந்தாலும் திமுகவுடன் கூட்டணிக்கு டெல்லி தலைமை தயாராக இருந்தாலும், தங்களுக்கு சீட் கிடைக்காமல்போய்விடுமே என்று அஞ்சும் மாநிலத் தலைவர்கள் இதை ஏற்க மறுத்து வருகின்றனர். இதனால் முதலில் மாநில காங்கிரஸ்தலைவர்களை சமாதானப்படுத்தும் வேலையில் சோனியா காந்தியின் தூதுவரான கமல்நாத் ஈடுபட்டுள்ளார்.
கூடுதலாக இரண்டு சீட்களாவது தர வேண்டும் என்று திமுக தலைமையிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் மீண்டும்தொலைபேசியில் கோரியதாகவும் அதை திமுக ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
காங்கிரசுக்கு 10 தந்தாலே தங்களுக்கு 15 சீட்கள் மட்டுமே மிஞ்சும் என்று சிங்கிடம் திமுக தெரிவித்துவிட்டது. கூடுதலாககொடுத்தால் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் எங்களால் 13 இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும். இது எங்கள்தொண்டர்களுக்கு வருத்தம் தரும் என திமுக கூறியுள்ளது.
இதனால் நேற்று நடந்திருக்க வேண்டிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இன்று இந்தப் பேச்சுவார்த்தைநடந்தது.
சீட் இழுபறி விவகாரத்துக்கு வாசனின் ஆதரவாளர்கள் தான் காரணம் என திமுக திட்டவட்டமாக நம்புகிறது. திமுகவுடன்வேண்டா வெறுப்பாகவே கூட்டணிக்கு ஒப்புக் கொண்ட வாசன், ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், தங்கபாலு,சோ.பாலகிருஷ்ணன் ஆகியோர் தான் டெல்லி காங்கிரஸ் தலைமையைக் குழப்பி வருவதாக திமுக நினைக்கிறது.
அதிமுக ஆதரவாளர்களான இவர்களது நெருக்குதலுக்கு பணிவதில்லை என்பதில் திமுக திட்டவட்டமாக உள்ளது. இதனால்காங்கிரஸ் தான் இறங்கி வர வேண்டிய நிலையில் உள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தையில் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடும் என கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications