கருணாநிதி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி மீது மேலும் அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
முரசொலி நாளிதழில் கருணாநிதி சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில், சென்னை மெரீனா கடற்கரையோரம் உள்ள டிஜிபிஅலுவலகத்தை இடிக்க தமிழக அரசு முயற்சி செய்ததாக எழுதியிருந்தார்.
இது தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாக கூறி கருணாநிதி, முரசொலி நாளிதழ் ஆசிரியர்செல்வம் ஆகியோர் மீது சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஏற்கனவே கருணாநிதி மீது ஒரு அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications