நாட்டின் முதல் பெண் போலீஸ் பட்டாலியன்: தமிழகம் சாதனை
சென்னை:
இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து மகளிர் போலீஸ் படையை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் தொடங்கிவைத்தார்.
அதிரடிப்படை, கமாண்டோ படை, விரைவு அதிரடிப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த முதலாவது பெண் போலீஸ்பட்டாலியனின் துவக்கி விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது.
ஆண் வீரர்களுக்கு இணையாக இந்த வீராங்கனைகளுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போலீஸ்படையை தொடங்கி வைத்து ஜெயலலிதா பேசுகையில், தமிழக காவல்துறை வரலாற்றில் இந்த நாள் ஒரு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த நாள்.
நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்றும் எனது கனவின் ஒரு பகுதிதான் இந்த மகளிர் படை. தமிழகத்தில்காவல்துறையை நவீனமாகவும், சிறப்பாகவும் மாற்றும் பொருட்டு கடந்த ஆண்டு ரூ. 134.61 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மொத்தம் 1,600 பெண் காவலர்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டனர். விரைவில் மேலும் 2,300 பெண்போலீஸார் மற்றும் 961 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படுவார்கள்.
எனது கடந்த ஆட்சிக் காலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அறிமுகப்படுதப்பட்டு நாடு முழுவதும்பிரபலமடைந்தது. இப்போது தமிழகத்தில் மொத்தம் 148 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன என்றார் ஜெயலலிதா.
முன்னதாக பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். அவருக்கு 21 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.