மெக்கா கூட்ட நெரிசலில் 11 இந்தியர் உட்பட 260 பேர் பலி-- ஏ.ஆர்.ரஹ்மான் பத்திரம்

Subscribe to Oneindia Tamil

மெக்கா:

மெக்காவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 260 பேர் உயிரிழந்தனர்.இதில் 11 இந்தியர்களும் அடங்குவர்.

இந்த வருடம் மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்ய வந்த பயணிகள் எண்ணிக்கை 18.9 லட்சமாகும். இதில்இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 1.2 லட்சம். இந்த முறை ஹஜ் யாத்திரைக்கு பிரபல இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரஹ்மானும் சென்றிருந்தார்.

நேற்று மெக்காவில் சாத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஜம்ரத் பாலம் அருகே ஏற்பட்டகூட்ட நெரிசலில் 244 பேர் உயிரிழந்தனர். மேலும் 244 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கைமேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதில் இந்தியர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை இந்திய ஹஜ் குழுத் தலைவர் சையது அக்பரூத்தின்உறுதிப்படுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் (வயது 70), கேரளாவைச் சேர்ந்த மொஹம்மத் அலி (வயது40), காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மொஹம்மத் அப்துல்லா மீர் (வயது 40) ஆகியோர் சம்பவ இடத்தில்இறந்துள்ளனர்.

மேலும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மொஹம்மத் முகைதீன் என்பவர் நெரிசலில் சிக்கி, மீண்ட பின்மாரடைப்பினால் இறந்துள்ளார். மற்ற 7 பேர் குறித்த விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக இருப்பதாக தமிழ்நாடுஇஸ்லாமிய மக்கள் இயக்கத் தலைவர் காயல் இளவரசு மெக்காவிலிருந்து தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+