சென்னையில் சீட்டு மோசடி: ரூ.1 கோடியை இழந்த பொது மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி அளவுக்கு மோசடி செய்த பலசரக்குக் கடை வியாபாரிகள் திடீர்மாயமாகி விட்டனர்.

அயனாவரம் பகுதியில் பிரபலமான ஒரு பலசரக்குக் கடை உள்ளது. இந்தக் கடையை அண்ணன், தம்பிகள் 4 பேர்நடத்தி வந்தனர். கடை வியாபாரத்தோடு, அதிக வட்டி தருவதாகக் கூறி ஏலச்சீட்டும் நடத்தியுள்ளனர். முதல்வருடத்தில் ஏலம் எடுத்தவர்களுக்கு உரிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவே, மேலும் பலர் ஏலச்சீட்டில்சேர்ந்துள்ளனர்.

ரூ.10,000, ரூ.50,000, ரூ.1 லட்சம் என பல பிரிவுகளில் ஏராளமானோர் தங்களது பணத்தைக் கட்டியுள்ளனர்.கடந்த 6 மாத காலமாக ஏலம் எடுத்தவர்களுக்கு உரிய பணத்தை சரியாகத் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.

இதனால் பணம் கட்டியவர்கள் கடைக்குச் சென்றபோது, கடை பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். அதன்பின் ஆண்களும், பெண்களும் சுமார் 150 பேர் கமிஷ்னர்அலுவலகம் சென்று மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.

இந் நிலையில், ஏலச்சீட்டு நடத்தியவர்கள் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, ஏராளமானோர்அங்கு சென்றனர். அங்கு பதுங்கியிருந்தவர்களிடம் சென்று பணம் கேட்டபோது, நாய்களை அவிழ்த்து விட்டு,விரட்டினார்களாம். போலீஸாரிடம் இது குறித்தும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+