சாலை பணியாளர்களுக்கு ஒரு வாரத்தில் ஊதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலைநீக்கம் செய்யப்பட்ட சுமார் 10,000 சாலைப் பணியாளர்களுக்கு ஒரு மாதசம்பளத்தைத் தமிழக அரசு இன்னும் ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலைநீக்கத்தை எதிர்த்து, சாலைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் மாரிமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிர்புர்கர், நீதிபதி கண்ணதாசன் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச், இவர்களுக்கு நிவாரணத் தொகையாக ஒரு மாதச் சம்பளத்தை அரசு வழங்க வேண்டும் என்றுகடந்த டிசம்பர் 22ல் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த மனுவில் திருத்தம் கோரி தமிழக அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,சாலை பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்குவதால் அரசுக்கு ரூ.4 கோடி இழப்பு ஏற்படும் என்றுகூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை அடுத்த ஒரு வாரத்திற்குள்நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு, அரசு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+