ஜனனியின் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடராஜனின் தோழி ஜனனி, அவரது தாயார்ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோரின் நீதிமன்றக் காவல் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தியதாகக் கூறி ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மதுரை போலீஸாரால்கைது செய்யப்பட்டனர். இவர்களில் சதீஷ் மதுரை சிறையிலும், மற்ற இருவரும் திருச்சி சிறையிலும்அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கைவிசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந் நிலையில் இவர்களது சிறைக் காவல் இன்றுடன்முடிவடைவதால், மூன்று பேரும் மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இவர்களது காவலை 16ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சம்பத்குமார் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications