For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை ஜெ. ஆண்டிப்பட்டி பயணம்: தேர்தல் ஸ்பெஷல் நலத் திட்டங்களை துவக்கி வைக்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா நாளை தனது தொகுதியான ஆண்டிப்பட்டி செல்கிறார். தேர்தலையொட்டி ஆண்டிப்பட்டிஉள்ளிட்ட தேனி மாவட்டத்துக்கு பல நலத் திட்டங்களை அறிவிக்கவுள்ளார்.

மதுரை வரை சிறப்பு விமானத்தில் செல்லும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கண்டமனூர் செல்கிறார்.அங்கிருந்து கார் மூலம் தேனி ராஜேந்திரா நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் ரூ. 127 கோடியளவுக்கு நலத்திட்டங்களை அறிவிக்கவுள்ளார்.

இந் நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏவான பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொள்கிறார்.

கம்பத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா, 5 தலித் விடுதிகள் திறப்பு, கள்ளர் சமூகத்தினருக்குஆசிரியர் பயிற்சி பள்ளி, சாலைகள் அமைப்பு, கண்மாய் அமைப்பு, தேனி, உத்தமபாளையம், தெப்பம்பட்டியில் 3மகளிர் காவல் நியைங்கள், தாசில்தார் அலுவலக குடியிருப்புகள், துணை மின் நிலையம், மண்ணெண்ணெய்விற்பனை மையம், அவசர சிகிச்சை மையம், கூட்டுறவு வங்கி திறப்பு விழா என தேனி மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளுக்கும் ஏகப்பட்ட திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார் ஜெயலலிதா.

மேலும் உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் கோலில் அன்னதான மண்டபம், மரத் தேர் அமைக்கும்பணிகளையும் துவக்கி வைக்கிறார். சுமார் 375 திட்டங்களை நாளை துவக்கி வைக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் வருகையையொட்டி தேனி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X