திருச்சி: கள்ளச் சாராயம் குடித்த 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே கள்ளச் சாராயம் குடித்த 2 பேர் இறந்தனர். ஒருவரது கண் பார்வை பறிபோனது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட சிலர் சாராயம் வாங்கிஅருந்தியுள்ளனர். அதில் விஷத் தன்மை இருந்ததால் சாராயம் சாப்பிட்ட 2 பேர் சில நிமிடங்களிலேயே இறந்தனர்.
வேலுச்சாமி என்பவருக்கு கண் பார்வை பறிபோனது. கவலைக்கிடமான நிலையில் அவர் திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 3 பேர் மணப்பாறை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுக் கடைகளைத் தாங்களே நடத்தி, கள்ளச் சாராயத்தை ஒழித்துக் கட்டிவிட்டதாக அதிமுக அரசு தன்னைத் தானேபாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தச் சாவுகள் நடந்துள்ளன.
திருச்சி பகுதியில் காக்கிகளின் மாமூலான உதவியுடன் சாராய ஊரல்கள் ஊற்றெடுத்துக் கொண்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications