ஸ்ரீரங்கம் தீ விபத்து: பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆனது
திருச்சி:
ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 23ம் தேதி ஸ்ரீரங்கம் பத்மப்பிரியா கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், மணமகன் உட்பட 62 பேர்இறந்தனர். இதில் ஆண்கள் 32 பேர், பெண்கள் 25 பேர், ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை 4 ஆகியோர்அடங்குவர்.
இந் நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவெங்கட்ரமணராவ்(67) நேற்று இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆனது. மேலும் 14 பேர்ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டப உரிமையாளரின் ஜாமீன் தள்ளுபடி:
இந் நிலையில், பத்மப்பிரியா திருமண மண்டப உரிமையாளர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தீ விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மண்டப உரிமையாளர், மேலாளர், வீடியோகேமராமேன், பந்தல் போட்டவர் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இதில் மண்டப உரிமையாளர் ராமசாமிஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ராஜன், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.