வைகோ கருணாநிதியை சந்தித்தார்: 15ம் தேதி கலிங்கப்பட்டியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
சென்னை:
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜாமீனில் விடுதலையான பின்பு,திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார்.
சென்னை வந்த அவர் நேற்றிரவு 8.30 மணிக்கு கருணாநிதியைச் சந்திக்க அறிவாலயம் சென்றார். அவருடன் கட்சிஅவைத் தலைவர் எல்.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர்உடன் சென்றனர்.
சந்திப்பின்போது, கருணாநிதியுடன் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, தயாநிதி மாறன்ஆகியோர் உடன் இருந்தனர். 9.20க்கு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது, மீண்டும்என்னை சிறையில் அடைக்க முயற்சிக்கும் ஜெயலலிதா அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.
வரும் 14ம் தேதி மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடக்கிறது. அதில் கலந்து கொண்ட பின்பு,வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டி செல்கிறார். 15ம் தேதி இரவு அங்கு பொதுக்கூட்டத்தில்பேசவிருக்கிறார். விடுதலைக்குப்பின் பேசும் முதல் கூட்டம் என்பதால், கலிங்கப்பட்டியில் பிரம்மாண்டமானஏற்பாடுகளை அந்த ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications