சிறுவர்களுக்கு சிகரெட் விற்க மே முதல் தடை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பள்ளி சிறுவர்களுக்கு சிகரெட் விற்பதைத் தடை செய்யும் சட்டம் வரும் மே மாதம் முதல் அமலுக்கு வருகிறதுஎன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
புகையிலை தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குசிகரெட், பீடி ஆகியவை விற்றால், அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். மேலும், பத்திரிக்கைமற்றும் தொலைக்காட்சிகளில் சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்குதடை விதிக்கப்படவுள்ளது.
இதற்கான அரசாணை அடுத்த வாரம் பிறப்பிக்கப்படவுள்ளது. வரும் மே மாதம் முதல் இந்த புதிய உத்தரவுகள்அமலுக்கு வரும் என்றார்.












Click it and Unblock the Notifications