ஷார்ஜா விமான விபத்தில் பலியான 3 தமிழர்கள்
ஷார்ஜா:
ஷார்ஜாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்ற ஈரான் நாட்டு விமானம் விபத்துக்குள்ளானதில்பலியானவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதில் 3 பேர் தமிழர்களாவர்.
விபத்தில் பலியான தமிழர்கள்: கந்தசாமி, சுஜாகர் (நெல்லை மாவட்டம் களக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்),கே.எஸ். மோகனன் ஆகியோர் ஆவர்.
விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள் ஆவர்.
ஐக்கிய அரபு நாடுகளில் விசிட் விசாவை நிரந்தர விசாவாக மாற்ற நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் வரவேண்டும். இதற்காக ஈரான் நாட்டின் கிஷ் தீவுகளுக்கு தொழிலாளர்கள் போய், 5 அல்லது 6 மணி நேரங்களில்திரும்பி வருவது வழக்கம்.
இந்தத் தீவுக்கு சில நாடுகள் சிறிய ரக விமானங்களை இயக்குகின்றன. இதில் கட்டணமும் குறைவு. அதே போலத்தான் ஈரானும் கிஷ் ஏர்லைன்ஸ் என்ற பெயரகில் 60 இருக்கைகள் கொண்ட விமானங்களை இயக்கி வருகிறது.இந்த விமானங்களில் பெரும்பாலானவை மிகப் பழையவை. ரஷ்யாவில் உருவாக்கப்பட்டவை.
இதனால் இதில் பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுவிட்டன. அவ்வாறு பறக்க லாயக்கில்லாத ஒரு விமானம் தான்நேற்று விபத்துள்ளானதாகத் தெரியவந்துள்ளது.