சோனியாவுக்கு எதிராக முளைத்த திடீர் போஸ்டர்கள்
சென்னை:
சென்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்து திடீரென போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதைக்கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து அவர்களை போலீஸார் இரவோடு இரவாகக்கைது செய்தனர்.
சென்னை அடையாறு, சாஸ்திநகர் பகுதிகளில் நேற்று மாலை இந்த திடீர் போஸ்டர்கள் முளைத்தன. அதில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மிக மோசமாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.
இது காங்கிரஸ்காரர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சியின் மாநிலச் செயலாளர் விடியல் சேகர்தலைமையில் சாஸ்திரி நகர் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடி ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.தகவல் அறிந்தால் காலையில் பிரச்சனை மேலும் வெடிக்கும் என்பதால் அவர்களை நள்ளிரவு 2 மணிக்கு மேல்போலீசார் விடுவித்துவிட்டனர்.
காவல் நிலையத்தில் விடியல் சேகர் நம் நிருபரிடம் கூறுகையில், அதிமுகவினரின் ஆதரவுடன் தான் இந்தபோஸ்டர்களை விஷமிகள் ஒட்டியுள்ளனர். அதிமுகவினரின் இந்தச் செயல் மிகவும் கீழ்த்தரமானது,மூன்றாந்தரமான செயல் இது என்றார்.