For Daily Alerts
Just In
2வது நாளாக எதிர்க்கட்சிகள் சட்டசபை புறக்கணிப்பு
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத்தை 2வது நாளாக இன்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
பட்ஜெட் மீது விவாதம் நடத்த அனுமதியில்லை என்ற அலுவல் ஆய்வுக் குழு முடிவை எதிர்த்து திமுக, பா.ம.க.,காங்கிரஸ் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய 5 எதிர்க்கட்சிகள் நேற்று முதல் 13ம் தேதி வரை சபைக்கூட்டத்தை புறக்கணிப்பதென முடிவெடுத்தன.
அதன்படி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது இந்த ஐந்து கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் சபைக்குவரவில்லை. அதேபோல இன்றும் அவர்கள் சட்டசபைக்கு வரவில்லை.
இந் நிலையில் அரசின் செலவீன மானியக் கோரிக்கையை நிதியமைச்சர் பொன்னையன் இன்று அவையில் தாக்கல்செய்தார். அது விவாதமின்றி குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டது.
நாளையுடன் சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவடைகிறது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, February 12, 2004, 5:30 [IST]