மதுரை நீதிபதிக்கு கைதி பகிரங்க கொலை மிரட்டல்
மதுரை:
நீதிபதியையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவேன் என்று மதுரை நீதிமன்றத்தில் கைதிபகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே போலீஸ் வேனிலிலிருந்து அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம்அலி, ஹைதர் அலி ஆகியோர் தப்பிச் செல்ல உதவியதாக 17 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீதான வழக்கு மதுரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்குவந்தபோது 17 பேரும் ஆஜர் செய்யப்பட்டனர்.
அப்போது பக்ருதீன் என்பவர் நீதிபதி மேரியிடம் சில தகவல்களை நீதிபதியின் அறையில் வைத்து சொல்லவிரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த நீதிபதி மேரி, எதுவாக இருந்தாலும் உங்களதுவழக்கறிஞர் மூலம் தெரிவியுங்கள் என்று உத்தரவிட்டார்.
நீதிபதி இவ்வாறு கூறியதும், கோபமான குரலில் நீதிபதியைப் பார்த்து உங்களையும், உங்களது குடும்பத்தினரையும்பூண்டோடு அழித்து விடுவேன் என்று ஆவேசமாக பக்ருதீன் சப்தம் போடவே, நீதிமன்றத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
உடனடியாக பக்ருதீனை போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்று வேனில் ஏற்றி அமர வைத்தனர்.