சென்னை குடிநீர் பஞ்சம்: விவசாயக் கிணறுகளில் நீர் எடுக்க அரசு திட்டம்
சென்னை:
சென்னை நகரில் நிலவும் மிகக் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவிவசாயக் கிணறுகளை குத்தகைக்கு எடுத்து தண்ணீர் சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பூண்டி, பூந்தமல்லி, பஞ்செட்டி, பொன்னேரி, திருவள்ளூர், கன்னிகைப்பேர், மணலி ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கானவிவசாயக் கிணறுகளை குத்தகைக்கு எடுக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த நீர் லாரிகள் மூலம் நகரில் வினியோகிக்கப்படும். இப்போது நாள்தோறும் 2,500 லாரிகள் மூலம் நகரில் குடிநீர் சப்ளைசெய்யப்படுகிறது.
இந்தப் பணியில் மேலும் 1,000 லாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளன. நகரில் மேலும் 1,000 போர்வெல் கிணறுகள் அமைத்துகைபம்புகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் வரும் நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்பதால் துரிதநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications