வெங்கைய்யாவுடன் திருமாவளவன்- கிருஷ்ணசாமி சந்திப்பு
டெல்லி:
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், மக்கள் தமிழ்த் தேசம் கட்சியின் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் டெல்லியில்பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுவைச் சந்தித்துப் பேசினர்.
திமுக கூட்டணியில் இடம் தரப்படாததால் தனியாக மூன்றாவது அணியை அமைத்துள்ள இவர்கள் அதில் மற்றகட்சிகளையும் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி இழுபறியில் உள்ள பா.ஜ.கவையும் தங்களது அணிக்குள் இழுக்கும்திட்டத்துடன் அவர்கள் நாயுடுவைச் சந்தித்தனர்.
ஆனால், அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும் தொகுதிப் பங்கீடு பிரச்சனை தான் இருப்பதாகவும்கூறிய நாயுடு இவர்களது அணியில் சேர ஆர்வம் காட்டவில்லை. வருங்காலத்தில் நாம் இணைந்து செயல்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டால் நிச்சயம் சேருவோம் என்ற உறுதிமொழியை மட்டும் தந்து திருப்பி அனுப்பிவிட்டார்.
பா.ஜ.கவுடன் திமுக கூட்டணி வைத்திருந்ததை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் எதிர்த்தவர் திருமாவளவன்.பா.ஜ.க வருணாசிரம தர்மத்தை ஆதரிக்கும் கட்சி என்றும் தாக்கியுள்ளார். அவர் போய் பா.ஜ.கவுடன் கூட்டணிசேர முயன்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications