மதுரை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஜாதி மோதல்: 3 பேருக்கு கத்திக் குத்து
மதுரை:
மதுரை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே ராகிங் தகராறு ஜாதிச் சண்டையாக மாறியது. இதையடுத்து இருஜாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது.
மதுரை சட்டக்- கல்-லூரியில் ஓயாத பிரச்சனையாக இருப்பது ராகிங் மற்றும் ஜாதித் தகராறு.
இரு தினங்களுக்கு முன் இதே போல ராகிங் பிரச்சனை ஜாதி மோதலாக மாறியது. இரு தரப்பினரும் பயங்கரமாகமோதிக் கொண்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களது நண்பர்களாக வெளியாட்களும் இறங்கவேகல்வீச்சு, அடிதடி, கத்திக் குத்து என ரணகளமானது.
இதில் ஜெய -கார்த்-திக், தனுஷ்-கோடி ஆகிய மாணவர்களுக்கும் அவர்களது நண்பரான கண்ண-பிரான்என்பவருக்கும் கத்தி-குத்து விழுந்-தது. இதையடுத்து மோதலுக்குக் காரணமாக இருந்த 17 மாணவர்களை கல்லூரிநிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. கல்லூரியையும் மூடியது.
இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தையடுத்து ஜாதியைச் சொல்லி திட்டி-ய-தாக 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்-பட்-டுள்ளது.
மேலும் மோதல் நடக்காமல் தடுக்க கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications