பத்திரிக்கை அலுவலகத்துக்கு சீல்: உயர் நீதிமன்றத்தில் நெடுமாறன் வழக்கு
சென்னை:
தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன், தனது தென் ஆசிய செய்தி என்ற பத்திரிகையின்அலுவலகத்திற்கு போலீஸார் சீல் வைத்துள்ளதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்துள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு ன்பு பழ நெடுமாறன், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்துமயிலாப்பூரில் அவரது இல்ல வளாகத்தில் உள்ள தென் ஆசிய செய்தி பத்திரிக்கை அலுவலகத்தை போலீசார் மூடி,சீல் வைத்தனர்.
இதை எதிர்த்து சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் நெடுமாறன் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இந்த மனுவைநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதை எதிர்த்து தற்போது உயர்நீதிமன்றத்தில் நெடுமாறன் மேல் முறையீடுசெய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழகஅரசின் பொதுத் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு வரும் 23ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications