இரு காதல் ஜோடிகள் ஒரே இடத்தில் தற்கொலை
திருவாரூர்:
இரு காதல் ஜோடிகள் ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.
நன்னிலத்தை அடுத்த காளியாக்குடியை சேர்ந்தவர்கள் மாலா (20), பிரேமா (20). இவர்கள் உறவு முறையில்சகோதரிகள். பக்கத்து ஊரான பண்ணையநல்லூரைச் சேர்ந்தவர்கள் மாதவன் (20), கண்ணன் (19). இவர்களும்உறவு முறையில் சகோரரர்கள். இவர்கள் மண் சிலைகள் செய்யும் வேலை பார்த்து வந்தனர்.
இதில் மாலா-மாதவன் இடையிலும், பிரேமா-கண்ணன் இடையிலும் காதல் உருவானது.
ஆனால், இந்தக் காதலை நான்கு வீட்டாரும் ஏற்கவில்லை என்று தெரிகிறது. மாலாவை அவரது தாய்மாமனுக்குத்திருமணம் செய்து வைக்க முடிவு செய்து சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதனால் மனமொடிந்த மாலாவும் மாதவனும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதை அறிந்தகண்ணனும், பிரேமாவும், தங்களது காதலும் ஏற்கப்படாததால் தற்கொலை முடிவுக்கு வந்தனர்.
நான்கு பேரும் காளியாக்குடியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications