For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் பயம் வந்தாச்சு: கோவில்களில் பலியிட தடை நீக்கம்- அந்தர் பல்டி அடித்தார் ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையடுத்து, கோவில்களில் ஆடு, கோழிகள் உள்ளிட்ட விலங்குகளைப்பலியிடத் தடை செய்யும் சட்டத்தை நீக்கி தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போல ரேசன்அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ளகால அவகாசத்தையும் அரசு திடீரென நீட்டத்துள்ளது.

கடந்த 1950ம் ஆண்டு கோவில்களில் விலங்குகளைப் பலியிட தடைசெய்து சட்டம் பிறப்பிக்கப்பட்டது. நீண்டகாலமாக அமலில் இருந்து வந்த சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாமல் இருந்து வந்தது.

இந் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்தச் சட்டத்தை தூசி தட்டிஎடுத்த தமிழக அரசு அவசர அவசரமாகஅமல்படுத்தத் தொடங்கியது. இதற்குக் காரணமாக பெரிய வியாக்கியானமே பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

இதனால் நேர்த்திக் கடன் வைத்து கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிட்டு, பொங்கல் வைத்து வந்தலட்சக்கணக்கானோர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். குறிப்பாக தென் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

ஆனால், போலீசாரை வைத்து ஆடு, கோழிகளைக் காப்பாற்றி வந்தார் ஜெயலலிதா. மீறி வெட்டிய பூசாரிகள்,பக்தர்கள் கைது செய்யப்பட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேசன் அட்டைகள்:

இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள இன்னொரு உத்தரவில் ரேசன் அட்டைகளைப் புதுப்பிக்க காலஅவகாசத்தை நீட்டித்துள்ளார். இதற்கு கடந்த டிசம்பர் 31ம் தேதி தான் கடைசி நாளாக இருந்தது. ஆனால்,ஆயிரக்கணக்கானோர் ரேசன் அட்டையை அந்தக் கெடுவுக்குள் புதுப்பிக்கவில்லை.

இதனால் அந்த அட்டைகள் செல்லாதவையாக மாற இருந்தன. இந் நிலையில் அவற்றை மார்ச் 31 வரைபுதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் ரேசன் அட்டைகளைசெல்லாதவையாக்கினால் அதிமுகவுக்கு பிரச்சனை வரலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக்கருதப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வர, வர அதிமுகவுக்கு பயமும் அதிகரித்துக் கொண்டே வருவதையே இச்செயல்கள் காட்டுகின்றன.

முதலில் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் விஷயத்தில் பல்டி அடித்த அதிமுக அரசு. அடுத்ததாக விவசாயிகளுக்குஇலவச மின்சாரத்துக்கு மானியத்தைக் கூட்டி அந்த விஷயத்திலும் அந்தர் பல்டி அடித்தது. இப்போது பலியிடத்தடை விதிக்கும் சட்டத்தையும் வாபஸ் பெற்றுவிட்டது. ரேசன் கார்ட்கள் விஷயத்திலும் விட்டுக் கொடுத்துநடந்துள்ளது.

தேர்தல் தேதி இன்னும் நெருங்கும்போது மக்களுக்கு மேலும் பல நன்மைகள் நடக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X