அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலையில் நண்பர் கைது
வாஷிங்டன்:
கடந்த டிசம்பரில் அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் இந்திய மாணவர்மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குப் பின் சுதீரைக் காணவில்லை. இதையடுத்து பிரவீன் வேதம்என்பவர் உள்ளிட்ட சுதீரின் நண்பர்கள், அவரது வீட்டைத் திறந்து சோதனையிடுமாறு பல்கலைக்கழகஅதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து சுதீரின் வீட்டை ஜனவரி 4ம் தேதி அதிகாரிகள் உடைத்து சோதனையிட்டபோது அவர்படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலில் 30 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டகாயங்கள் இருந்தன.
சுதீரின் வீட்டிலிருந்த லேப்டாப், ஹோம் தியேட்டர் சிஸ்டம், விசிடி பிளேயர், டிவிடி பிளேயர் முதலானபொருட்களையும் காணவில்லை.
அதே நேரத்தில் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே யாரும் நுழைந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும்இல்லாமல் இருந்தது. இதனால் சுதீருக்கு மிக நெருக்கமான யாரோ தான் இந்தக் கொலையை செய்திருக்கவேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இந் நிலையில் பிரவீன் வேதம் என்ற அவரது நண்பரின் அலுவலகத்தில் சுதீரின் லேப்டாப் இருந்ததை போலீசார்கண்டுபிடித்தனர். இதையடுத்து லேப்டாப்பைத் திருடியதாக போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தனர். இப்போது கொலையையும் அவர் தான் செய்ததாக வழக்குப் போடப்பட்டுள்ளது.
பிரவீன் வேதமும் முன்னாள் புளோரிடா பல்கலைக்கழக மாணவர் தான். சுதீருடன் முன்பு ஒரே அறையில்தங்கியிருந்தவர். மேலும சுதீரைக் காணவில்லை என அதிகாரிகளுக்குத் தகவல் தந்தவர்களில் முக்கியமானவர்இவர் தான். இது தவிர சுதீரின் இறுதிச் சடங்கையும் இவர் தான் முன்னின்று நடத்தினார் எனபதும்குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications