தொடர்கிறது பாண்டிச்சேரி சிக்கல்: மசிய மறுக்கும் ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பதிலுக்காக அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து காத்திருக்கிறார்கள்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு புதுவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களது வெற்றிக்கோட்டையை, அட்ரஸே இல்லாத பாமகவுக்கு திமுக தூக்கி கொடுத்துவிட்டதால் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்புதுவை காங்கிரஸார்.
புதுவையில் காங்கிரஸ் தான் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். சென்னை வந்தசோனியா இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன் பேசினார். இதைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர்டாக்டர் ராமதாசுடன் கருணாநிதி கட்டப் பஞ்சாயத்து நடத்திப் பார்த்தார்.
ஆனால், ராமதாஸ் மசியவில்லை. பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன்செயல்பட்டு வரும் ராமதாஸ், அந்தத் தொகுதியிலும தோற்றாலும் கூட பரவாயில்லை, அதை காங்கிரசுக்கு விட்டுத்தர மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதை சோனியாவிடம் கருணாநிதி தொலைபேசி மூலம் தெரிவித்துவிட்டார். மேலும் இந்த விஷயத்தில் காங்கிரஸ்என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம், திமுக அதில் தலையிடாது என்றும் தெளிவுபடுத்திவிட்டார்.
இதற்கிடையே பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, தற்போதைய எம்.பியான எம்.ஓ.எச்.பாரூக்ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு தொடர்ந்து சோனியாவை நச்சரித்து வருகின்றனர்.
இதையடுத்து திண்டிவனம் ராமமூர்த்தி போன்ற வன்னிய இனத் தலைவர்கள் மூலம் ராமதாசிடம் சோனியா பேசிவருகிறார்.
இந்த முயற்சிகளும் பலனளிக்காவிட்டால் தான் சோனியா இறுதி முடிவெடுப்பார் என்று தெரிகிறது.
புதுவையை எங்களுக்குக் கொடுத்துவிட்டால், தனித்தே போட்டியிட்டு பாமகவை மண் கவ்வச் செய்வோம் என்றுகூறும் காங்கிரஸ் தலைவர்கள். இந்தத் தொகுதியில் பலமில்லாத பா.ஜ.க. நிற்பதால் தங்களுக்கு வெற்றி உறுதி என்றுசொல்லி சோனியாவை மனமிறஙக வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications