தமிழக வறட்சி பாதித்த மாவட்டங்களில் மத்தியக் குழு நேரில் ஆய்வு
சென்னை:
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களை இன்றும் நாளையும் மத்திய குழுவினர்பார்வையிடுகின்றனர்.
இந்தக் குழுவினர் 3 குழுக்களாகப் பிரிந்து சென்று வறட்சி நிலையை ஆய்வு செய்கின்றனர்.
தமிழகத்தில் நிலவும் வறட்சியை ஆய்வு செய்வதற்காக தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர்தினேஷ் ராய் தலைமையில் 9 பேர் கொண்ட குழு நேற்று சென்னை வந்தது. முதல்வர் ஜெயலலிதா,பொதுப்பணித்துறை, விவசாயத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இக் குழுவினர் ஆலோசனைநடத்தினர்.
இதையடுத்து இன்று இக் குழுவினர் 3 பிரிவாகப் பிரிந்து தமிழகத்தின் 11 மாவட்டங்களையும்பார்வையிடுகின்றனர்.
இந்தக் குழுக்கள் சென்னை, திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை,தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று பார்வையிடவுள்ளன.
திங்கள்கிழமை மீண்டும் சென்னை திரும்பி தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் இக் குழுடெல்லி திரும்பி வறட்சி நிலை குறித்து மத்திய அரசுக்கு ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்கும்.












Click it and Unblock the Notifications