For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் வீட்டில் இருந்த ரூ. 1.4 கோடி ஜமீன்தாரின் பணம்: ஜனனி போடும் புதிய குண்டு!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ. 1.4 கோடி பணம் ஒரு ஜமீன்தாருக்குச் சொந்தமானது என்று ஜனனிகூறியுள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நெருக்கமாக இருந்ததால் கஞ்சா வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்ஜனனி. அப்போது அவரது மதுரை, சென்னை பங்களாவில் (நடராஜன் வாங்கித் தந்தது) இருந்து ரூ. 1.4 கோடிபணமும் ஏராளமான நகைகளும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. ஒரு மிட்சுபிஸ் லேன்சர் காரும் பறிமுதல்செய்யப்பட்டது.

(கைப்பற்றப்பட்டது மேலும் அதிகமான பணம், நகைகள் என்றும் அதில் பெரும்பாலான நகைகள் சசி கும்பலிடம்தரப்பட்டுவிட்டதாக ஜனனி தரப்பு இலைமறை காயாகக் கூறுகிறது).

கார், நகைகள், பணத்துடன் 40 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றியதாக போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.

நான் கஞ்சாவையே பார்த்ததில்லை, இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறும் ஜனனி, இந்தவழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா ஸ்டைலில் ஒரு மனுவைஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதன் மீது வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் பல்வேறு மர்மங்கள் இருந்து வரும் நிலையில் இப்போது இன்னொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.வழக்கை பின்னால் இருந்து நடத்தி வருவதே நடராஜன் தான் என்ற சந்தேகம் பரவலாகவே உள்ளது.

இந் நிலையில் ஜனனியின் வழக்கறிஞரான சங்கர பாண்டியன் (இவர் வரும் எம்.பி. தேர்தலில் மதுரையில் அதிமுகசார்பில் போட்டியிட மனு செய்துள்ளார்) மதுரை போதைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜனனியின் சார்பில் ஒருமனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் ஜனனி கூறியிருப்பதாவது:

என் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ. 1.4 கோடி பணம் என்னுடையது அல்ல. அது கடம்பூர் ஜமீந்தார் ஜெகதீஸ்வரராஜாமற்றும் டெல்லியைச் சேர்ந்த ஆடிட்டர் ரவி சோப்ராவுக்குச் சொந்தமானது. இதனால் அந்தப் பணத்தைஅவர்களிடம் ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் என் கார், நகைகளை என்னிடம் திருப்பித் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவைநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த ஜமீன்தார், ஆடிட்டர் ஆகியோரையும் செட்-அப் செய்தது நடராஜன் தரப்பு தான் என்று போலீசார்சந்தேகிக்கின்றனர்.

ஜனனி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கு கணக்கு, வழக்கு இல்லாததால் அதை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வருமான வரித்துறையும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனனி விஷயத்தில் எல்லாமே மர்மம் தான் !!

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X