எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது: திரு மீது ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்
சென்னை:
கூட்டணி என்று வந்துவிட்டால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என மத்திய அமைச்சர்திருநாவுக்கரசருக்கு டோஸ் விட்டார் மாநில பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன்.
பா.ஜ.க. தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டத்தை திருநாவுக்கரசர் புறக்கணித்ததால் எரிச்சலடைந்துள்ளராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில்,
வரும் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்ல நாங்களும், நாங்கள் வெல்ல அதிமுகவும்பரஸ்பரம் பாடுபடுவோம்.
திருநாவுக்கரசருக்கு புதுக்கோட்டையைப் பெற்றுத் தர முடியவில்லை. கட்சியின் தலைவர் என்ற முறையில் அதற்குநான் பொறுப்பேற்கிறேன். அவர் என்னென்ன பணிகள் செய்தார் என்பதை மேலிடத்துக்கு சொல்லி இருக்கிறோம்.
பா.ஜ.க. தேர்தல் குழுக் அவர் புறக்கணிக்கவில்லை. கோவிலுக்குப் போவதாக சொல்லிவிட்டுத் தான் போனார்.
கூட்டணி என்று வரும்போது எல்லோரையும் (திருநாவுக்கரசர்) திருப்திப்படுத்த முடியாது. எங்களுக்கு வலுவுள்ளதொகுதிகளைத் தரும்படி ஒரு கட்டம் வரை தான் வற்புறுத்த முடியும். அதன் பின்னர் விட்டுக் கொடுக்கத் தான்வேண்டும்.
புதுக்கோட்டையை திருநாவுக்கரசருக்குத் தரக் கூடாது என்று அதிமுக எந்த நிர்பந்தமும் விதிக்கவில்லை. எங்களைப்பொறுத்தவரை தொகுதி ஒதுக்கீடு 100 சதவீதம் அல்ல, 101 சதவீதம் திருப்தி தருகிறது. புதுக்கோட்டையை தனக்குஒதுக்காமல் முதல்வர் ஜெயலலிதா சதி செய்துவிட்டதாக திருநாவுக்கரசர் கூறுவதி சரியல்ல.
திருநாவுக்கரசர் பா.ஜ.கவில் ஒரு அங்கம். எனவே புதுக்கோட்டையில் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்குபிரச்சாரம் செய்ய வேண்டியது அவரது கடமை.












Click it and Unblock the Notifications