சென்னையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி மீது ஆசிட் வீச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனது டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தனியார் நிறுவன பெண் அதிகாரி மீது மர்ம ஆசாமிகள் சிலர் திராவகத்தை வீசினர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி கண்ட்ரோல் பிரிவில் அதிகாரியாக இருப்பவர் சரோஜினி நாயகம் (34). இவர் வேலை முடிந்து, கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்ததார்.ய

அம்பத்தூர் முதலாவது மெயின் ரோட்டில் அவர் வந்து கொண்டிருந்தபோது மர்ம ஆசாமிகள் சிலர் அவரை வழி மறித்தனர்.

அந்த ஆசாமிகள் தாங்கள் வைத்திருந்த திராவக பாட்டிலை சரோஜினியின் தலை மீது வீசினர். ஆனால், அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால், தலையும் முகமும் தப்பியது. ஆசிட் தெறித்ததில் அவரது முதுகு, மார்பு, கை ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

வலியில் அவர் அலறித் துடித்தார். அவரது கூக்குரலைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். ஆசிட் வீசிய கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அம்பத்தூர் பகுதியில் ஏற்கனவே 2 முறை பெண்கள் மீது ஆசிட் வீசும் சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+