மீண்டும் வேலையில் சேர்ந்த ஊழியர்களுக்கு 6 மாத சம்பளம் இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலைநிறுத்தத்தின்போது பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் வேலையில் சேர்க்கப்பட்ட அரசு ஊழியர்கள்வேலைக்கு வராத நாட்கள் அவர்களுடைய விடுப்பில் கழித்துக் கொள்ளப்படும்.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் வெளியிட்டுள்ள உத்தரவில்கூறப்பட்டுள்ளதாவது:
பணி நீக்கம் செய்யப்பட்ட கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி முதல் ஜூலை 24ம் தேதி வரை அரசு ஊழியர்கள்ஈட்டிய விடுப்பில் சென்றதாகக் கணக்கிடப்படும். அதன்பிறகு ஜூலை 24 முதல் இம்மாதம் 10ம் தேதி வரையிலானநாட்கள் மருத்துவ விடுப்பாகக் கருதப்படும்.
பணிக்கு வராத நாட்களில் கையிருப்பு உள்ள விடுப்புகள் போக மீதி நாட்கள், சம்பளம் இல்லாத விடுப்புநாட்களாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட 999ஊழியர்களுக்கும் டிஸ்மிஸ் காலத்துக்கு சம்பளம் கிடைக்க வாய்ப்பில்லை.












Click it and Unblock the Notifications