வைகோவை சந்தித்தார் இளங்கோவன்
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் சந்தித்துப்பேசினார்.
இந்த சந்திப்பு வைகோவின் இல்லத்தில் நடந்தது. அப்போது வைகோவின் உடல்நலம் குறித்து இளங்கோவன் விசாரித்தார்.இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள். இதனையடுத்து இளங்கோவன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைசந்திக்க டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வைகோவிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். சோனியா காந்தியை சந்திக்கும்போது தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறுவைகோ கூறினார். இதை சோனியாவிடம் நான் தெரிவிப்பேன்.
வைகோவுடன் சோனியா ஒரே மேடையில் தோன்றுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. சோனியாவின் தமிழக தேர்தல் பிரச்சாரத்திட்டம் இன்னும் தயாராகவில்லை. கோபிச்செட்டிபாளையத்தில் போட்டியிட காங்கிரஸ் தலைமை அனுமதித்தால் நிச்சயம்போட்டியிடுவேன் என்றார்.
நாளை சொந்த ஊர் செல்கிறார் வைகோ:
19 மாத சிறைவாசத்துக்குப் பின் வைகோ முதன்முறையாக நாளை தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டி செல்கிறார். பாண்டியன்எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து கார் மூலம் கலிங்கப்பட்டி செல்கிறார். அவருக்கு வழி நெடுகிலும் சிறப்பானவரவேற்பு அளிக்க மதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கலிங்கப்பட்டியில் 28ம் தேதி நடைபெறவிருக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோசிறப்புரையாற்றுகிறார்.