நீதிமன்றத்தில் குடிபோதையில் கலாட்டா: வழக்கறிஞர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் கலாட்டா செய்த வழக்கறிஞர் கருணாநிதி என்பவரைபோலீஸார் கைது செய்தனர்.
இவர் நேற்று குடிபோதையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்தவர்களிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டார்.
அங்கிருந்த வழக்கறிஞர்களிடம் ஆபாசமாக பேசி சண்டைக்குப் போனார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சைதாப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராமசாமி போலீஸில் புகார் கொடுக்கவே போலீஸார் விரைந்து வந்துகருணாநிதியைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications