திருட்டு விசிடி: அழகிரி மீதான வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மு.க. அழகிக்குச் சொந்தமான வீடியோ கடையில் திருட்டு விசிடிக்கள் இருந்தது தொடர்பான வழக்கு விசாரணை மார்ச் 26ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அழகிரி. அடுத்த சில நாட்களில், அவரது வீடியோகடையில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி அங்கு ஏராளமான திருட்டு விசிடிக்களைப் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அழகிரி மற்றும் வீடியோ கடை மேலாளர் தாமோதரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குமதுரை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நீதிபதி இந்திராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அழகிரியும், தாமோதரனும் ஆஜராகினர்.இதையடுத்து மார்ச் 26ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications