For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்ச் 1ல் ஜாமீனில் விடுதலை ஆகிறார் ஜனனி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நடராஜனின் தோழி ஜனனி மற்றும் அவரது தாயார் ரமீஜா ஆகிய இருவரும் மார்ச் 1ம்தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனனி, ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோரை மதுரை கருப்பாயூரணி போலீஸார் கஞ்சாவழக்கில் கைது செய்தனர்.

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜனனி, ரமீஜாவை ஜாமீனில் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவுபிறப்பித்தது. தமிழகத்தில் நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றில் பெரும் கேலிக் கூத்தும், நாடகம் நடப்பதாக அப்போதுஉச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந் நிலையில் ஜனனியின் வழக்கறிஞர் சங்கரபாண்டியன் கூறுகையில், நாளை உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் எங்களுக்குக்கிடைக்கும். அதன் பிறகு திருச்சி சிறை கண்காணிப்பாளரிடம் உத்தரவு காட்டப்படும்.

மார்ச் 1ம் தேதி, திங்கள்கிழமையன்று ஜனனியும், ரமீஜாவும் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பர்க்கிறோம்.

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு தமிழக அரசு புதிய வழக்குகள் எதையாவது போட்டால் அதையும் சந்திக்க தயாராகஇருப்பதாக ஜனனி கூறியுள்ளார் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X