தேர்தல் தேதி தள்ளிப் போனதால் திட்டமிட்டபடி பிளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல் மே 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால்பிளஸ் டூ மற்றும் 10ம் வகுப்பு பொது இறுதித் தேர்வுகள் முன்பே திட்டமிட்ட காலத்தில் நடக்கும் என பள்ளித்தேர்வுகள் ஆணையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் வரும் மார்ச் 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கவுள்ளது. அதேபோல,பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந் நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் மே 10ம் தேதி தான் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்பேபள்ளித் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து விடும் என்பதால் தேர்வுகளைத் தள்ளிப் போடவோ அல்லது முன்பேநடத்தவோ அவசியம் எழவில்லை என பள்ளித் தேர்வுகள் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் பணிகளில் ஆசிரியர்களும் பெருமளவில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம் என்பதால், தேர்தலோடுதேர்வுகளும் வந்தால் சிரமம் உருவாகும் சூழல் நிலவியது.

ஆனாலும் கட்சிகளின் பிரச்சாரம், பரபரப்புகள், லவுட் ஸ்பீக்கர்கள், கரைவேட்டிகளின் அட்டகாசம், ஊர்வலங்கள்ஆகியவற்றால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கட்டாயம் இடைஞ்சல் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+