அண்ணாச்சிக்கு எதிராக ஜீவஜோதியின் தாயார் சாட்சியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜீவஜோதியையும், அவரது கணவர் பிரின்ஸ் சாந்தக்குமாரையும் சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால்கடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜீவஜோதியின் தாயார் தவமணி இன்று சாட்சியம் அளித்தார்.

பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் அவர் கூறியதாவது:

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தக்குமார் டிராவல்ஸ் கம்பெனி தொடங்க பல உதவிகளைச் செய்தார்ராஜகோபால். இவரின் உதவிகளை ஜீவஜோதி ஆரம்பத்தலிருந்தே என்னிடம் மறுத்து வந்தாள். இந் நிலையில்அவர் ஜீவஜோதியிடம் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இது குறித்து ஒருநாள்என்னிடம் ஜீவஜோதி புகார் கூறினாள்.

அன்றைய இரவு 12 மணிக்கு ராஜகோபால் என் வீட்டுக்கு வந்து என்னையும், என் கணவரையும் அழைத்துக்கொண்டு ஜீவஜோதியின் வீட்டுக்கு சென்றார். அங்கு பிரின்ஸ் சாந்தக்குமாரிடம், நான் ஜீவஜோதியைத் திருமணம்செய்து கொள்ள வேண்டும். நீ எங்கேயாவது ஓடிவிடு என்று மிரட்டினார்.

அதற்கு மறுநாள் ஜீவஜோதியும், சாந்தக்குமாரும் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டனர். அன்று பிற்பகல் 3 மணக்குராஜகோபாலின் ஆட்கள் வீட்டுக்கு வந்து இருவரையும் பிடித்து தரதரவென்று இழுத்து, எங்கள் வீட்டிலிருந்தஅனைவரையும் அசோக் நகரில் உள்ள சந்திரசேகர் என்பவரது குடோனுக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு வந்த ராஜகோபால் தனது ஆட்களுடன் சேர்ந்து கொண்டு சாந்தக்குமாரை சராமாரியாக அடித்தார்.ஜீவஜோதியை விட்டுச் செல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் என்னையும், என் மகள்,கணவரையும் மட்டும் வீட்டில் கொண்டு வந்து விட்டனர். சாந்தகுமாரை விடவில்லை என்றார்.

இதே வழக்கில் ஜீவஜோதி நேற்று சாட்சியமளித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+