For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாமகம்: சென்னையிலிருந்து நாளை சிறப்பு ரயில், 250 பேருந்துகள்

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சிநடைபெறுவதையொட்டி நாளை மேலும் ஒரு சிறப்பு ரயிலும் மற்றும் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

தென்னக ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை எழும்பூரில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு அகல ரயில் பாதையில் சிறப்பு ரயில்ஒன்று இயக்கப்படுகிறது. இது விருத்தாச்சலம், செங்கல்பட்டு, மேல்மருத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி,தஞ்சை வழியாக இரவு 9 மணிக்கு கும்பகோணம் சென்றடையும்.

நாளை மறுநாள் பகல் 1.30 மணிக்கு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு, இரவு 10.15க்கு சென்னை வந்து சேரும்.இதற்கான முன்பதிவு இன்று முதல் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மாநில போக்குவரத்துக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 3ம் தேதியிலிருந்து சென்னை-கும்பகோணம்இடையே 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே 70 பேருந்துகளும், கோவை, நெல்லை, சேலம், நாகர்கோவில் ஆகியபகுதிகளிலிருந்து 60 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இவையனைத்தும் 8ம் தேதி வரை இயக்கப்படும்.தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் இன்று கூட்டம் மிக அதிகமாக இருந்தது. வி.ஹெச்.பி. தலைவர் அசோக்சிங்கால் இன்று புனித நீராடினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X