தேர்தல் எதிரொலி: அடுத்த 6 வாரங்களுக்கு கலாம் நிகழ்ச்சிகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அடுத்த 6 வாரங்களுக்கு எந்த நிகழ்ச்சியிலும்பங்கேற்பதில்லை என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முடிவெடுத்துள்ளார்.
பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், அதில் அந்தந்த மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் பங்கேற்பார்கள்.அவர்கள் தங்கள் பேச்சில் அரசியலைக் கலக்கக்கூடும் என்பதால், அத்தகைய கூட்டங்களில் தான் கலந்துகொள்வது சரியாக இருக்காது என்று கருதிய அப்துல் கலாம் அடுத்த 6 வாரங்களுக்கு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.
இதன் காரணமாக அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications