சகலை "வெர்சஸ்" சகலை!
மங்களூர்:
மங்களூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக கருப்பசாமி என்பவர் போட்டியிடலாம்என்று கூறப்படுகிறது. இவர் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் சகலை ஆவார்.
திருமாவளவன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், மங்களூர் சட்டசபை தொகுதிக்குநாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தொகுதியில் அதிகமுவும், திமுகவும் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் வேட்பாளராக வழக்கறிஞர்ராமலிங்கம் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கருப்பசாமி என்பவர் போட்டியிடலாம் என்று தெரிகிறது. இவர்மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக உள்ளார். அதிமுக வேட்பாளர் ராமலிங்கத்தின் சகலைஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
மங்களூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர் பெரும் வெற்றியைப் பெறுவார். இந்தத்தொகுதியில் நாங்கள் வென்றே தீருவோம், இதற்காக கடுமையான பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக ஏற்கனவேதிருமாவளவன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications