ஜாதி துவேஷம் காட்டுகிறார் ஜெ.: ராமதாஸ் பாய்ச்சல்
கரூர்:
வன்னியர்கள் மீதான தனது ஜாதி துவேஷத்தைக் காட்டி பிற ஜாதியினரின் ஓட்டுக்களைப் பெற முதல்வர்ஜெயலலிதா முயலுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுராந்தகத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது டாக்டர் ராமதாஸ் ஒரு ஜாதி வெறியர் என்று மிகக் கடுமையாகதாக்கிப் பேசியிருந்தார் ஜெயலலிதா. இதற்கு கரூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதில் அளித்தார்ராமதாஸ்.
அவர் பேசுகையில், அரசியல் காரணங்களுக்காக ஜாதியை பயன்படுத்துகிறார் ஜெயலலிதா. வன்னியர்கள் மீதானதனது ஜாதி துவேஷத்தை வெளிப்படுத்தி, பிற ஜாதியினரின் ஓட்டுக்களைப் பெற முயலுகிறார்.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் நலனுக்காக பா.ம.க. (?)கடுமையாகப் பாடுபட்டுள்ளது. என்னை ஜாதி வெறியன் என்று கூறிய ஜெயலலிதாவுக்கு இந்த சமுதாயத்தினர்நல்ல பாடம் கற்பிப்பார்கள்.
சோனியாவை வெளிநாட்டுப் பெண் என்று இப்போது கூறும் ஜெயலலிதா, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியைக்கவிழ்த்து விட்டு அதே வேகத்தில், சோனியா காந்தியைப் பிரதமராக்க ஆதரவு தருவதாக குடியரசுத் தலைவருக்குகடிதம் எழுதியது ஏன்? அப்போது சோனியா வெளிநாட்டுப் பெண் என்று அவருக்குத் தெரியாதா?
ஜெயலலிதாவுக்கு எதிராக அதிருப்தி அலை தமிழகத்தில் வீசுகிறது. எனவே ஜனநாயக முற்போக்குக் கூட்டணிபாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications